Monday, September 17, 2012

காதல்....

வான்வெளியில்  நிகழ்ந்தது போல

நம் கண்களிடையே சந்திப்பு!

மனதிற்குள் பட்டாம்பூச்சி அது தான் காதலோ?

அந்த விதை அரும்பாகி மரமானது

நம் மனதிலே, நீயின்ரேல் நானில்லை

என்ற நிலை நம் வாழ்வில்!

நாம் கோயிலுக்கு சென்றிருந்தோம்

நீ கடவுளை தரிசித்தாய் நான்

உன்னை தரிசித்தேன்! நம் இருவரையும்

உன் தாய் தரிசித்து விட்டாள்!

வீட்டில் பூகம்பம் என்றாய் நீ

என்னை மறந்துவிடு என்றாய் நீ!

சரி என்றேன் நான்! உன் மகிழ்ச்சியே

என் மகிழ்ச்சி என வாழ்ந்தவன் நான்

உனக்காகத்தான் சரிஎன்றேன்!

உன் நினைவுகளான என் உயிர்

நினைவுகளை கேட்டாய்  நீ!

மனகனத்துடன் தந்தேன் நான்!

மீண்டும் வந்தாய் நீ பத்திரிகையுடன்!

திருமணம் என்றாய் நீ உனக்கு,

வருகிறேன் என்றேன் நான் !

உன் திருமணத்தில் என் நண்பனிடம்

கூறினேன் என்னை விட அவன்

அவளுக்கு பொருத்தமானவன் என்று

பைத்தியம் என்றான் என் நண்பன் என்னை!

நாட்கள் கடந்தன! மாதங்கள் முடிந்தன!

ஆண்டுகள் உருண்டோடின!

உன்னை மறந்துவிட்டதாய் எண்ணினேன் நான் !

நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்தேன்!

உன் பெயர் பொதிந்த சாவியை பார்த்தேன்

என் அழுகையை அடக்க முடியவில்லை என்னால்!!!

பிம்பம்

இமைகளை மூடிய பின்பும்

விழியில் உன் பிம்பம்

அது கனவாலா?

இல்லை

காதலாலா??

முடிவு.........

என்றோ ஒருநாள் நான் 

எடுத்த முடிவால் இன்றும்

வாட்டுகிறாய் உன் நினைவால்..

உன்னை நேரிலே காணும்

நாளை எண்ணி காத்திருக்கிறேன் !

என்னை உனக்கு தெரிகிறதா?

இல்லை எவனோ ஒருவன் என்றெண்ணி

மறந்துவிட்டாயா ! என்றாவது

ஒருநாள்  உன்னை நேரிலே காண்பேன்

என்ற நம்பிக்கையுடன் உயிர் வாழ்கிறேன்!!!!

தொலைவு

என் நிலவை பார்க்கையிலே
உன் நினைவு தோன்றுதடி!
அந்நிலவின்  தொலைவு
சுகம்தானடி எனக்கு
உன் நினைவின் பிரிவு
என்றுமே வலி தானடி எனக்கு !!

Saturday, September 15, 2012

செத்துவிடும் ஆசை தான்

செத்துவிடும் ஆசை தான் வந்ததடி எனக்கு 
நீ என்னை பிரிகையில்!!
செத்தாலும் பிழைபேனடி
உன் பார்வை படும் வேளையில்!!!

Tuesday, March 15, 2011

வேண்டாமடி நீ எனக்கு.......

பகலிலும் வெளிச்சம் இல்லை
இரவிலும் தூக்கம் இல்லை
கனவிலும் வாழ்கையில்லை
வாழ்க்கையில் எதுவுமில்லை
உன் வார்த்தைகள் பொய்த்ததனால்....
மனவரயில் நீ இருக்க
பிணவரெயில் நானிருக்க
வேண்டாமடி நீ எனக்கு..
என்றுமே!!!
வேண்டாமடி காதல் எனக்கு......!!!!!!!

Friday, May 7, 2010

உன் சிரிப்பு......

எதேச்சையாகதான் பார்த்தேன் உன்னை என் பேருந்தில்..

எச்சரிக்கையாய் இருக்க சொன்னது என் மனம்.....

ஆனால் மீண்டும் உன்னை பார்த்தேன் உன் சிரிப்பினால்

இப்பொழுதோ உன்னை மறக்க வழி தெரியாமல்

தவிக்கிறது என் மனம் காதலினால்............