வான்வெளியில் நிகழ்ந்தது போல
நம் கண்களிடையே சந்திப்பு!
மனதிற்குள் பட்டாம்பூச்சி அது தான் காதலோ?
அந்த விதை அரும்பாகி மரமானது
நம் மனதிலே, நீயின்ரேல் நானில்லை
என்ற நிலை நம் வாழ்வில்!
நாம் கோயிலுக்கு சென்றிருந்தோம்
நீ கடவுளை தரிசித்தாய் நான்
உன்னை தரிசித்தேன்! நம் இருவரையும்
உன் தாய் தரிசித்து விட்டாள்!
வீட்டில் பூகம்பம் என்றாய் நீ
என்னை மறந்துவிடு என்றாய் நீ!
சரி என்றேன் நான்! உன் மகிழ்ச்சியே
என் மகிழ்ச்சி என வாழ்ந்தவன் நான்
உனக்காகத்தான் சரிஎன்றேன்!
உன் நினைவுகளான என் உயிர்
நினைவுகளை கேட்டாய் நீ!
மனகனத்துடன் தந்தேன் நான்!
மீண்டும் வந்தாய் நீ பத்திரிகையுடன்!
திருமணம் என்றாய் நீ உனக்கு,
வருகிறேன் என்றேன் நான் !
உன் திருமணத்தில் என் நண்பனிடம்
கூறினேன் என்னை விட அவன்
அவளுக்கு பொருத்தமானவன் என்று
பைத்தியம் என்றான் என் நண்பன் என்னை!
நாட்கள் கடந்தன! மாதங்கள் முடிந்தன!
ஆண்டுகள் உருண்டோடின!
உன்னை மறந்துவிட்டதாய் எண்ணினேன் நான் !
நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்தேன்!
உன் பெயர் பொதிந்த சாவியை பார்த்தேன்
என் அழுகையை அடக்க முடியவில்லை என்னால்!!!
நம் கண்களிடையே சந்திப்பு!
மனதிற்குள் பட்டாம்பூச்சி அது தான் காதலோ?
அந்த விதை அரும்பாகி மரமானது
நம் மனதிலே, நீயின்ரேல் நானில்லை
என்ற நிலை நம் வாழ்வில்!
நாம் கோயிலுக்கு சென்றிருந்தோம்
நீ கடவுளை தரிசித்தாய் நான்
உன்னை தரிசித்தேன்! நம் இருவரையும்
உன் தாய் தரிசித்து விட்டாள்!
வீட்டில் பூகம்பம் என்றாய் நீ
என்னை மறந்துவிடு என்றாய் நீ!
சரி என்றேன் நான்! உன் மகிழ்ச்சியே
என் மகிழ்ச்சி என வாழ்ந்தவன் நான்
உனக்காகத்தான் சரிஎன்றேன்!
உன் நினைவுகளான என் உயிர்
நினைவுகளை கேட்டாய் நீ!
மனகனத்துடன் தந்தேன் நான்!
மீண்டும் வந்தாய் நீ பத்திரிகையுடன்!
திருமணம் என்றாய் நீ உனக்கு,
வருகிறேன் என்றேன் நான் !
உன் திருமணத்தில் என் நண்பனிடம்
கூறினேன் என்னை விட அவன்
அவளுக்கு பொருத்தமானவன் என்று
பைத்தியம் என்றான் என் நண்பன் என்னை!
நாட்கள் கடந்தன! மாதங்கள் முடிந்தன!
ஆண்டுகள் உருண்டோடின!
உன்னை மறந்துவிட்டதாய் எண்ணினேன் நான் !
நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்தேன்!
உன் பெயர் பொதிந்த சாவியை பார்த்தேன்
என் அழுகையை அடக்க முடியவில்லை என்னால்!!!